பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதிக்கு பூட்டு

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதிக்கு பூட்டு

பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியானது, அனைத்து வகையான வாகனப் போக்குவரத்துக்காகவும் இன்று (27) முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை முற்றாக மூடப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இவ்வீதியின் மன்னம்பிட்டி – கல்லெல்ல பகுதி நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகப் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தேவைக்கேற்ப ரயில் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )