
தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் – ஐவருக்கு பிணை
வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் உட்பட ஐவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தவிசாளர், பிரதி தவிசாளர் உள்ளிட்ட நால்வர் இன்று (25) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று (24) சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், ஐவரையும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு
உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
CATEGORIES இலங்கை
