அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் கலாச்சார மரபுரிமைகளை புறக்கணிக்கின்றது

“தற்போதைய அரசாங்கம் பௌத்த சமயம் மற்றும் அதனோடினைந்த கலாச்சார மரபுரிமைகளையும் புறக்கணித்து செயற்படுகிறது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (12) நிலையியற் கட்டளை 27/ 2 இல் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,”அரசியலமைப்பின் 2 ஆம் அத்தியாயம், இலங்கை குடியரசில் பௌத்த மதத்திற்கு முதன்மை ஸ்தானத்தை வழங்குவதோடு, ஏனைய சகல மதங்களுக்கும் அதற்குரிய உரிமைகளை பாதுகாக்கும் அதேவேளையில், பௌத்தத்தை பாதுகாத்து போஷிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாக அமைந்து காணப்பட வேண்டும் என்றும் அது கூறுகிநின்றது.
புத்த சாசனத்தையும் அதனது நிலைத்தன்மைக்காகச் செயற்படும் மகா சங்கத்தினரை பாதுகாப்பதும், அதன் நீண்ட கால இருப்பும், சங்க மரபின் நடைமுறைகள் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்தலும் அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாக அமைந்து காணப்பட வேண்டும். என்றாலும், தற்போதைய அரசாங்கம் அந்த கலாச்சார பாரம்பரியத்தை புறக்கணிப்பதாகத் தெரிகின்றது.
1979 ஆம் ஆண்டின் 64 ஆம் இலக்க பிரிவேனா கல்விச் சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதும், இதன் மூலம், பாரம்பரிய பிரிவேனா கல்விக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பதன் காரணமாக பல பிரச்சினைகள் எழுந்துள்ளன
2025 ஆம் ஆண்டில் புத்தசாசன அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியின் அளவு மற்றும் அதன் பௌதீக மற்றும் நிதி முன்னேற்றம், 2026 ஆம் ஆண்டில் இந்த அமைச்சின் கீழ் பௌத்த மதத்தின் முன்னேற்றத்திற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் போலவே அதற்காக ஒதுக்கப்பட்ட தொகை என்பவற்றை முன்வைக்க வேண்டும்” என்றார்.
