ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த இராஜதந்திரிகள்

ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த இராஜதந்திரிகள்
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.
இன்று தங்கள் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் பின்வருமாறு.
1. கொழும்பை தளமாகக் கொண்டு பணியாற்றும் கனடா உயர் ஸ்தானிகர் இசபெல் மாரி கெதரின் மார்ட்டின்
Ms. Isabelle Marie Catherine Martin, High Commissioner of Canada, based in Colombo
2. கொழும்பை தளமாகக் கொண்டு பணியாற்றும் நெதர்லாந்து இராச்சிய தூதுவர் வீபே ஜேக்கப் டி போயர்.
Mr. Wiebe Jakob De Boer, Ambassador of the Kingdom of the Netherlands, based in Colombo.
3. கொழும்பை தளமாகக் கொண்டு பணியாற்றும் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மெதிவ் ஜோன் டக்வேர்த்.
Mr. Matthew John Duckworth, High Commissioner of the Commonwealth of Australia, based in Colombo.
4. புது டில்லியை தளமாகக் கொண்டு பணியாற்றும் அல்ஜீரியா மக்கள் ஜனநாயகக் குடியரசின் தூதுவர் அப்துநோர் ஹொலிஃபி.
Mr. Abdenor Khelifi, Ambassador of the People’s Democratic Republic of Algeria, based in New Delhi.
5. புது டில்லியை தளமாகக் கொண்டு பணியாற்றும் ஐஸ்லாந்து குடியரசின் தூதுவர் பெனடிக்ட் ஹஸ்குல்ட்சன்.
Mr. Benedikt Höskuldsson, Ambassador of the Republic of Iceland, based in New Delhi.
இராஜதந்திரிகளை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அவர்களுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இணைந்து பணியாற்ற அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Share This