நாடாளுமன்றத்தில் சஜித் பிரேமதாசவிற்கு நன்றி தெரிவித்த அநுர

மாகாண சபை தேர்தல் பற்றி எனக்கு தீர்மானிக்க முடியாது. தேர்தல் முறைமையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொடுங்கள். மாகாண சபைத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டுக்கான சுதந்திர இலங்கையின் 80 ஆவது வரவு – செலவுத்திட்டம் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் 2 ஆவது வரவு – செலவுத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை (நவம்பர் 07) நிதியமமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஊழல் மோசடியாளர்களுடன் ஒன்றிணையமாட்டார். அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க 2500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுர குமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
