மத்தளையில் முதல் முறையாக தரையிறங்கும் பெலாரஸ் விமானம்

முதல் முறையாக, பெலாரஸின் பெலாவியா ஏர்லைன்ஸுக்குச் சொந்தமான விமானம் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளது.
குறித்த விமானம் இன்று (28) பிற்பகல் சுற்றுலாப் பயணிகள் குழுவுடன் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமானம் 170 சுற்றுலாப் பயணிகளுடன் வர திட்டமிடப்பட்டுள்ளது.
ரஷ்யாவிற்குச் சொந்தமான ரெட்விங்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றே இலங்கைக்கு வரவுள்ளது.
