அதிக விலைக்கு அரிசி விற்பனை – நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்ததற்காக நாடு முழுவதும் 135 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த மாதத்தில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 135 வர்த்தகர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்பவர்கள் மற்றும் அரிசி கையிருப்புக்களை மறைப்பவர்கள் மீதான சோதனைகள் தொடரும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் தனிப்பட்ட விற்பனையாளர்களுக்கு ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை அபராதம், ஐந்து மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே குற்றத்திற்காக தனியார் நிறுவனங்களுக்கு ஐந்து லட்சம் முதல் முதல் ஐந்து மில்லியன் ரூபா வரை அபராதம் விதிக்கப்படலாம் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அரிசியை மறைத்து வைப்பது தொடர்பான வழக்குகளில், நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் தொடர்புடைய பொருட்களை பறிமுதல் செய்வதோடு கூடுதலாக அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டையும் விதிக்க அதிகாரம் இருப்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.