அர்ச்சுனாவை எதிர்க்கட்சித் தலைவராக்குங்கள் ; விமல் வீரவன்ச

யாழ். மாவட்ட பாரைளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனை எதிர்க்கட்சித் தலைவராக்குமாறு கோரியுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் விமல் வீரவன்ச, நாட்டின் பொது பிரச்சினையை பேசுபவர் எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார் என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு (29) நடத்திய அரசியல் நிகழ்ச்சியின் போது, ஓரினசேர்க்கையாளர்களை இலங்கையின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு ஈர்ப்பது தொடர்பில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.