மின்சார சபை ஊழியர்கள் போராட்டம் – கொழும்பில் போக்குவரத்து நெரிசல்

சுகவீன விடுமுறையை அறிவித்துள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் இன்று மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இதன் காரணமாக, தலைமை அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, கொம்பனித் தெருவில் இருந்து லேக் ஹவுஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதியின் ஒரு மருங்கில் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.