சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய அதிகாரசபை

சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு புதிய அதிகாரசபை

சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தின் ஊடாக சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அதிகாரசபையை நிறுவும் அதிகாரம் வழங்கப்படும் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டம் குறித்து விசேட விளக்கமளிக்கும் போதே பிரதியமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சூதாட்டத்தால் சமூகத்தில் ஏற்படக்கூடிய பாதகமான நிலைமைகளை ஆய்வு செய்து, அது தொடர்பாக விதிமுறைகளை வெளியிட அதிகாரசபைக்கு அதிகாரங்களை வழங்கும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கருத்து தெரிவித்த பிரதியமைச்சர்,

“அனைத்து சட்டங்களையும் ஒரே இடத்திற்குக் கொண்டு வந்து அதிகாரசபை நிறுவுவது, சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபை சட்டத்தின் ஊடாக பிரதானமாக அதிகாரங்களை வழங்குவதாகும்.

அந்த அதிகாரசபை, கெசினோ, சூதாட்டத்திற்கு இரண்டு உரிமங்களை வழங்கும் என்று இது அர்த்தப்படுத்துவதில்லை. இது ஒழுங்குமுறை பற்றியது. அந்த ஒழுங்குமுறை அனைத்தையும் உள்ளடக்கியது.

அந்த ஒழுங்குமுறையில், எந்த சூதாட்டங்களுக்கு அனுமதி வழங்குதல், அனுமதிக்கப்பட்டால், அதற்கு உட்பட்ட கட்டுப்பாடுகள்.

அத்துடன் கொடுக்கப்பட்ட உரிமத்தை நீக்குதல் அல்லது தடை செய்தல் போன்ற அனைத்து விடயங்களையும் இதன் கீழ் செய்ய முடியும்.

சூதாட்டம் சமூகத்திலும் கலாச்சாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே, சூதாட்டம் எந்தவொரு பொருளாதார செயல்பாட்டையும் செய்யும்போது, சமூகத்திலும் கலாச்சாரத்திலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறதா? என்பதை ஆய்வு செய்து, குறித்த விதிமுறைகளை வெளியிடுவது சூதாட்ட ஒழுங்குமுறை அதிகாரசபையின் மற்றொரு பொறுப்பாகும்.

இந்தச் சட்டம் என்ன செய்கிறது என்பதை எளிமையாகச் சொன்னால், சூதாட்டம் மற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் ஒரே சட்டம், ஒரே சுயாதீன அதிகாரசபையின் கீழ் ஒழுங்குபடுத்துவதாகும்” என்று அவர் கூறினார்.

 

Share This