அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது

அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது

பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த தனது முடிவை சபாநாயகர் இன்று (10) நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணாகவும், சரியான முறையில் இல்லாததால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சபாநாயகர் தெரிவித்தார்.

Share This