மத்திய பஸ் தரிப்பிடத்தை மூடுவதற்கு தீர்மானம்

நவீனமயப்படுத்தல் பணிகள் காரணமாக நாளை மறுதினம் நள்ளிரவு முதல் கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனால் மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ஒன்றிணைந்த கால அட்டவணைக்குரிய பஸ்கள் தவிர்ந்து ஏனைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் சேவைகள் போதிராஜ மாவத்தையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.