மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுவது உறுதி – பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். பழைய முறைமையின்கீழ் அத்தேர்தல் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், எல்லை நிர்ணய அறிக்கை சபையில் நிறைவேற்றப்படவில்லை. எனவே, பழைய முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவது பற்றி பரிசிலீக்கப்படுகின்றது.
இணக்கம் எட்டப்பட்டால் அது தொடர்பான சட்ட திருத்தம் சபையில் முன்வைக்கப்படும்.
தேர்தலுக்கு நாம் அஞ்சவில்லை. அதனை நடத்தும் நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்.” – என்றார்.