இம்ரான்கானின் மருமகன் கைது

இம்ரான்கானின் மருமகன் கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (72) மீது ஊழல், பண மோசடி உள்பட 150-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதுதொடர்பான ஒரு வழக்கில் அவரை குற்றவாளி என கோர்ட் உறுதி செய்தது. எனவே ராவல்பிண்டியில் உள்ள கோர்ட்டில் அவர் தண்டனை அனுபவித்து வருகிறார்.

முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டு மே 9-ம் திகதி பொலிஸார் அவரை கைது செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த வன்முறை தொடர்பாக பஞ்சாப் மாகாணத்தில் வசிக்கும் இம்ரான்கானின் மருமகன் ஷாஹ்ரேஸ் கானை லாகூர் பொலிஸார் தற்போது கைது செய்துள்ளனர்.

Share This