அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்

அதிக விலைக்கு போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட விலையை மீறும் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார சபையின் தலைவர் ஹேமந்தா சமரக்கோன் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட வணிகங்களுக்கும் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு போத்தல் குடிநீரை விற்பனை செய்வது சட்டவிரோதமானது என்றும் இது நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை மீறும் செயல் எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )