புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவிடம் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 61E(b) பிரிவின்படி இந்தப் புதிய நியமனத்திற்கு அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட்டது.

இதன்படி, இலங்கையில் 37வது பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவதற்கு முன்னர் இலங்கை பொலிஸ் துறையின் மூன்று நிலைகளிலும், அதாவது பொலிஸ் கான்ஸ்டபிள், உதவி பொலிஸ் பரிசோதகர் மற்றும் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ஆகிய பதவிகளிலும் பணியாற்றியவர் என்ற சிறப்பை அவர் பெற்றுள்ளார்.

 

Share This