‘சிச்சியின் ராக்கெட்’ க்கு கிடைத்த வருமானம் – விசாரணைகள் ஆரம்பம்

‘சிச்சியின் ராக்கெட்’ க்கு கிடைத்த வருமானம் – விசாரணைகள் ஆரம்பம்

‘சிச்சியின் ரொக்கெட்’ என்று பரவலாக அறியப்படும் சுப்ரீம் SAT திட்டம் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்று அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் பின்னணியில் உள்ள நிறுவனத்தால் ஈட்டப்பட்ட வருமானம் குறித்த விவரங்களை பிரதமர் அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிட்டிருந்தார்.

இருப்பினும், அந்த புள்ளிவிவரங்கள் தவறானவை என்று அமைச்சர் வசந்த சமரசிங்க பின்னர் தெளிவுபடுத்தினார். இந்தத் தரவுகள் பிரதமருக்கு அதிகாரிகளால் வழங்கப்பட்டவை என்றும் அவை சுயாதீனமாக சரிபார்க்கப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“பிரதமர் நாடாளுமன்றத்தில் பதிலளிக்கும் போது, துல்லியமான தகவல்களை வழங்குவது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பொறுப்பாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்தத் தவறு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சரியான உண்மைகள் பகிரப்படுவதை உறுதி செய்வதற்காக நான் ஒரு அறிக்கையை வெளியிட்டேன், ”என்றும் அமைச்சர் சமரசிங்க கூறினார்.

அரசாங்கம் இடம்பெற்றுள்ள பிழையைக் கண்டறிந்துள்ளதாகவும், இந்தத் தகவல் அதிகாரிகளிடமிருந்து வந்தது என்றும் மேலும் இது தொடர்பில் ஆராயப்படும் என்றும் பிரதமர் அமரசூரியா ஏற்கனவே நாடாளுமன்றத்தில் இதுகுறித்து சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

Share This