தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு பேர் இடைநிறுத்தம்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு பேர் இடைநிறுத்தம்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களை கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேருவளை நகர சபையின் மேயர் மற்றும் உப மேயர் தெரிவின் போது தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்களே இவ்வாறு இடைநிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This