ஜூலை மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 48,300 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 48,300 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தின் முதல் எட்டு நாட்களில் 48,300 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜூலை மாதத்தின் முதல் ஆறு நாட்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 10,153 ஆகும்.

அதன்படி, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,860 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 3,310 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 3,181 சுற்றுலாப் பயணிகளும், பிராஸ்சிலிருந்து 2,335 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 2,153 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.

இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து ஜூலை மாதம் 08 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 1,216,344 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )