சிரியா மீதான தடைகளை நீக்கும் உத்தரவில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சிரியா மீதான சில நிதித் தடைகளை நீக்குவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது பஷர் அல்-அசாத்தை வெளியேற்றிய பின்னர் நாட்டை நிலைப்படுத்த உதவும் என்றும் வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
“சிரியா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் திட்டத்தை நிறுத்துவதற்காக” இந்த உத்தரவு வடிவமைக்கப்பட்டுள்ளது.
டமாஸ்கஸின் இரசாயன ஆயுதத் திட்டம் தொடர்பாக சிரியா அரசாங்கம் சொத்துக்களை முடக்கி, சிரியாவிற்கு ஏற்றுமதி செய்வதை மட்டுப்படுத்திய 2004 அறிவிப்பை இரத்துச் செய்துள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.