நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை ஒப்புக்கொண்ட ஹர்ஷ இலுக்பிட்டிய

மின்னணு விசா வழங்கும் செயல்முறை தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய, நிபந்தனையின்றி குற்றத்தை ஒப்புக்கொள்வதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அவருக்கு இம்மாதம் 24 ஆம் திகதி தண்டனை விதிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்தது.