புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர் கைது

அநுராதபுரம் மாவட்டம் கல்னேவ பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்னேவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட சில உபகரணங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.