பங்களாதேஸுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி

இலங்கை- பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கொழும்பில் (எஸ்எஸ்சி) கடந்த 25ஆம் திகதி தொடங்கியது. நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. இலங்கையின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 247 ஓட்டங்களுக்கு பங்களாதேஸ் அணி ஆட்டமிழந்தது.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 458 ஓட்டங்களை குவித்தது. தொடக்க வீரர் பதும் நிசங்க 158 ஓட்டங்களை விளாசினார். குசால் மெண்டிஸ் 84 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமல் 93 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
211 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பங்களாதேஸ் அணி தமது 2ஆவது இன்னிங்சை தொடங்கியது. 2ஆவது இன்னிங்சிலும் இலங்கை வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். இதனால் நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் பங்களாதேஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 115 ஓட்டங்களை எடுத்திருந்தது.
இதனையடுத்து இன்று 4 ஆம் நாளில் விளையாடிய பங்களாதேஸ் அmணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 133 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் சமநிலையில் முடிந்த நிலையில், 2 ஆவது டெஸ்டில் வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் இலங்கை அணி வெற்றிக்கொண்டுள்ளது.