பதுளை , துன்ஹிந்த பகுதியில் விபத்துக்குள்ளான பஸ் – மூவர் பலி

பதுளை – துன்ஹிந்த பகுதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த 27 பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.