
துமிந்த திசாநாயக்கவிற்கு விளக்கமறியல்
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று (19) அவர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஹேவ்லாக் சிட்டி வீட்டுத் தொகுதியில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட துமிந்த திசாநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
CATEGORIES இலங்கை
