சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் பதவி விலகவுள்ளதாக தகவல்

சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் பதவி விலகவுள்ளதாக தகவல்

சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலைகள் கண்காணிப்பாளர் காமினி பி. திசாநாயக்க, தனது பதவி விலகல் கடிதத்தை சிறைச்சாலைகள் பதில் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஜனாதிபதியின் மன்னிப்பை துஷ்பிரயோகம் செய்து ஒரு கைதி விடுவிக்கப்பட்டமை தொடர்பான தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஊடகப் பேச்சாளர் தனது தவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், சிறைச்சாலைகள் திணைக்களத்தை மறுசீரமைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் சிறைச்சாலை கண்காணிப்பாளர்களின் பதவிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதி அமைச்சின் கூடுதல் செயலாளர் நிஷான் தனசிங்க அந்தப் பதவியைப் பொறுப்பேற்க நியமிக்கப்பட்டார்.

Share This