இந்தோனேசியாவில் அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்

இந்தோனேசியாவில் அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தோனேசியாவின் மேடான் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (08) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

குறித்த ஏர்பஸ் ஏ-320 விமானம் கடந்த ஐந்தாம் அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு 93 பயணிகள் மற்றும் 8 பணியாளர்களுடன் புறப்பட்டது.

எனினும், இந்தப் பயணத்தின் போது, ​​இந்தோனேசிய வான்வெளியில் பறந்துகொண்டிருந்த விமானம் தொழில்நுட்பக் கோளாறை சந்தித்தது, இதனால் மேடன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

அந்த விமான நிலையத்தில் விமானத்தை பழுதுபார்க்க எந்த வசதிகளும் இல்லாததால், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பொறியாளர்கள் குழு ஒன்று தேவையான உதிரி பாகங்களுடன் மறுநாள் (06) மதியம் ஒரு சிறப்பு விமானத்தில் மேடான் விமான நிலையத்திற்கு புறப்பட்டது.

விமானத்தை பழுதுபார்த்த பின்னர், குறித்த விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This