காசாவில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் குழந்தைகள்

காசாவில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் குழந்தைகள்

காசா மனிதாபிமான அறக்கட்டளை மீண்டும் அந்தப் பகுதியில் உள்ள அதன் அனைத்து உதவி விநியோக மையங்களையும் மூடி, பட்டினியால் வாடும் பலஸ்தீனியர்களை அவர்களின் பாதுகாப்புக்காக விலகி இருக்குமாறு கூறியுள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் முதல் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்ளும் காசா குழந்தைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது 2,700 இற்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

தெற்கு பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதிகளான தாஹியே மற்றும் தெற்கு லெபனானில் உள்ள பல பகுதிகளில் நேற்றிரவு இஸ்ரேல் குண்டு தாக்குதல் மேற்கொண்டது.

இந்த தாக்குதல் ஹெஸ்பொல்லாவுடனான இஸ்ரேலின் போர் நிறுத்த ஒப்பந்த மீறல் என லெபனான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55,000 ஐ கடந்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 125,000 ஐ கடந்துள்ளது.

 

Share This