கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் சர்வதேச பாதுகாப்பு பல்கலைக்கழகமாக மாற்றப்படும் – பிரதமர்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் சர்வதேச பாதுகாப்பு பல்கலைக்கழகமாக மாற்றப்படும் – பிரதமர்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் சர்வதேச பாதுகாப்பு பல்கலைக்கழகமாக மாற்றப்பட உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை சர்வதேச பாதுகாப்பு பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான சட்ட சீர்திருத்தங்களை கொண்டு வர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தை அமைப்பதற்காக நிலத்தை நன்கொடையாக வழங்கிய மறைந்த பிரதமர் ஜான் கொத்தலாவலவின் விருப்பமும் இதுவே.

கடந்த அரசாங்கங்கள் தங்கள் விருப்பப்படி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக நடத்தி வந்தன” என்றார்.

Share This