சோள இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

சோள இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

திரிபோஷா உற்பத்திக்குத் தேவையான தரம் உறுதி செய்யப்பட்ட சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

உள்ளூரில் சோளம் கொள்வனவு செய்வதில் உள்ள சிரமத்தை கருத்திற்கொண்டு ஒரு வருடத்திற்குத் தேவையான சோளத்தை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதி உரிமத்தை இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்குவதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இலங்கை திரிபோஷா லிமிடெட்டின் வருடாந்திர சோளத் தேவை 18,000 மெட்ரிக் தொன்களாகவும் மாதாந்த தேவை 1,500 மெட்ரிக் தொன்களாகவும் உள்ளது.

அனைத்து கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 06 மாதங்களுக்கும் மேலான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷா வழங்கப்படுகிறது.

திரிபோஷா உற்பத்திக்கான முக்கிய பொருட்களாக சோளம் மற்றும் சோயாபீன்ஸ் பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Share This