பேங்கொக் – பட்டாயா நகரில் இலங்கை சுற்றுலா பயணி மீது தாக்குதல் நடத்திய திருநங்கை

பேங்கொக் – பட்டாயா நகரில் திருநங்கை ஒருவர் தாக்குதல் நடத்தியல் இலங்கை சுற்றுலா பயணி ஒருவர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 54 வயதான இலங்கையர் ஒருவரே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
சவாங்போரிபுல் அறக்கட்டளையைச் சேர்ந்த பொலிஸார் இரவு 10.30க்கு பட்டாயா கடற்கரை சாலையில் உள்ள சோய் 13/3 என்ற முகவரிக்கு அழைக்கப்பட்டனர்.
அங்கு 54 வயது இலங்கையர் ஒருவர் தலையில் இருந்து இரத்தப்போக்குடன் இருப்பதை கண்டு அவரை மீட்டு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் விசாரணைக்காக இரு தரப்பினரையும் முவாங் பட்டாயா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும், 29 வயதான திருநங்கை, இலங்கையரை ஹீல் ஷூவால் தலையில் பலமுறை தாக்கியதாக ஒப்புக்கொண்டார்.
திருநங்கை வழங்கிய வாக்குமூலத்தின்படி, சுற்றுலாப் பயணி தன்னை அணுகியதாகவும், தன்னுடைய சேவைக்கு 2,000 பாட் விலை பேசியதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் தான் ஒரு பெண்ணா என்பதை உறுதிப்படுத்த பிறப்புறுப்பைத் தொட்டுப்பார்ப்பதாகச் சொன்னார். “நான் அவரை ஒரு முறை தொட அனுமதித்தேன்.
ஆனால் அவர் பணம் கொடுக்காமல் மீண்டும் என்னைத் தொட்டபோது, நான் கோபமடைந்தேன், இதனால் எங்கள் இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது,” என்று தாக்குதல் நடத்திய திருநங்கை குறிப்பிட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றியதும் “நான் அவரது சட்டையின் காலரைப் பிடித்தேன், அதற்குப் பதிலாக அவர் என் சட்டையை இழுத்தார், இதனால் என் மார்பில் ஒரு கீறல் ஏற்பட்டது. நான் கோபமடைந்து, ஹை ஹீல்ட் ஷூவால் அவரது தலையில் அடித்தேன்.” என்றார்.
எவ்வாறாயினும், திருநங்கையின் பாலினத்தை உறுதி செய்யவே தொட்டதாகவும், அதன் பின்னர் சேவையைத் தொடர விரும்பவில்லை என்று முடிவெடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட இலங்கையர் கூறினார்.
“நான் ஒப்பந்தத்தை ரத்து செய்து விலகிச் செல்ல முயன்றபோது, அவர் என் சட்டையை பின்னால் இருந்து இழுத்து, உயர் குதிகால் காலணியால் தாக்கினார்,” என்று அவர் பொலிஸாரிடம் விளக்கமளித்துள்ளார்.