பாணந்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

பாணந்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

பாணந்துறை வெகட பகுதியில் உள்ள மோட்டார் சைக்கிள் உதிரிபாகக் கடை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

இன்று (29) காலை 10 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்

துப்பாக்கிச் சூட்டின் போது கடையில் இருந்த ஒரு தொழிலாளி காயமடைந்துள்ளதாகவும், அவர் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன், இந்த ஆண்டு பதிவான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This