இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகருடன் செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக்கை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது, பெருந்தோட்டத் துறையின் தற்போதைய நிலைமை குறித்து கலந்துரையாடல் மேற்கொண்டதுடன், இந்திய வம்சாவளி தமிழர்களின் வரலாற்று இடம்பெயர்வு, சமகால அரசியல் போக்கு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து செந்தில் தொண்டமான் விளக்கம் அண்ட்ரூ பெட்ரிக்குக்கு விளக்கம் அளித்துள்ளார்.