ரவி மோகனுக்கு தெரியாமல் தனுசுடன் உறவில் இருந்த ஆர்த்தி – பிரபல பாடகி வெளியிட்ட தகவல்

கடந்த சில நாட்களாகவே, ஊர் முழுவதும் நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி, மற்றும் அவரது புது தோழி கெனிஷா உள்ளிட்ட ஒரு குறித்த பேச்சாகத்தான் இருக்கிறது.
இவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வரும் அறிக்கைகளால், இவர்களின் குடும்ப சண்டை பலருக்கும் தெரியும் வகையில் இருக்கிறது. இந்த நிலையில், இவர்கள் குறித்து பிரபலம் ஒருவர் வெளியிட்டு இருக்கும் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெயம் ரவி என்ற தனது பெயரை ரவி மோகன் என்று தனது பெயரை மாற்றிய இவர், தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதை எடுத்து அவர் தோழி கெனிஷாவுடன் இருக்கும் புகைப்படங்கள் வைரலானது. இவர்கள் காதலர்கள் என்று கூறப்பட்ட நிலையில் தங்கள் நண்பர்கள்தான் என முன்னர் கூறினர்.
ஆனால் அதே பெண்ணுடன் தற்போது ரவி மோகன் காதல் உறவில் இருப்பதாக கூறப்படுகிறது.
தனக்கு விவாகரத்து வேண்டும் என ஒரு பக்கம் ரவி மோகன் போராட, நான் இருக்கும் வீட்டை அவர் காலி செய்ய சொல்வதாக ஆர்த்தி இன்னொரு பக்கம் அறிக்கையை வெளியிட்டார்.
தன்னைக் கொடுமைப்படுத்தியதால் தான் குடும்பத்தை விட்டு பிரிய வேண்டிய நிலை வந்தது என்று ரவி மோகன் இன்னொரு அறிக்கையின் விளக்கம் கொடுத்தார்.
அதன் பிறகு முதல் முறையாக ரவி மோகனின் மாமியார், சுஜாதா விஜயகுமார் ஒரு அறிக்கையை வெளியிட்டார்.
அதில், தான் இன்னும் தனது மருமகன் ஜெயம் ரவியை மகனாக நினைப்பதாகவும், இப்போதும் அவர் குடும்பத்துடன் மீண்டும் வந்து இணைந்து வாழ வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
தமிழ் சினிமாவில் இருந்து மொத்தமாக பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட பிரபலமாக இருக்கிறார் சுச்சி என்கிற பாடகி சுசித்ரா. இவர் சமீபத்தில் நான்கு வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டிருந்தார்.
அதில் ரவி மோகனுக்கு எதிராக பேசிய பிரபல youtuber அஹமத் மீரானுக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் இவர்களை எதிர்ப்பவர்கள் ஏன் நீங்கள் நீதிபதிகளாக மாறிவிடுகிறீர்கள் என்றும் கேள்விகளை விடுத்தார்.
சமீபத்தில் ஒரு பதிவையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் ஆர்த்தி, ரவி மோகனுக்கு தெரியாமல் ஒரு பிரபல நடிகருடன் உறவில் இருந்ததாக கூறியிருக்கிறார்.
ஆர்த்திக்காக அவர் பதிவிட்டுள்ள கடிதத்தில், உங்களுக்காக வேலை செய்ய நீங்கள் அஹமத் மீரான் மீரான் போன்ற சிலரை வைத்திருப்பதாக கூறியிருந்தார்.
மேலும் அஹ்மத் மீரானுக்கு ஒரு கேள்வி வைத்த அவர், “எத்தனையோ பேசும் நீங்கள் ரவிக்கு தெரியாமல் ஆர்த்தி தனுசுடன் உறவில் இருந்ததையும், எப்போதும் அந்த உறவை தொடர்ந்து வருவதையும் எப்போது வெளியே கூறப் போகிறீர்கள்?” என்று கேட்டிருக்கிறார்.
இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.