அரசாங்கத்திடம் வாகனங்களை மீள கைளித்த முன்னாள் ஜனாதிபதிகள்

அரசாங்கத்திடம் வாகனங்களை மீள கைளித்த முன்னாள் ஜனாதிபதிகள்

முன்னாள் ஜனாதிபதிகள் ஐந்து பேரில் நான்கு பேர் தற்போது தங்களது மேலதிக வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைத் தவிர, மற்ற அனைத்து முன்னாள் ஜனாதிபதிகளும் வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட மூன்று வாகனங்களில் ஒன்றைத் திருப்பித் தருமாறு ஜனாதிபதியின் செயலாளரின் எழுத்துப்பூர்வ அறிவிப்பின்படி இந்த வாகனங்கள் முன்னாள் ஜனாதிபதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 23 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட வாகனத்தை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று ஏப்ரல் 19 ஆம் திகதி ஜனாதிபதி செயலாளர் கடிதம் அனுப்பியிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக் ச மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு ஜனாதிபதி செயலாளரினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதன்படி, மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய லேண்ட் க்ரஷர் V8 கார் 28 ஆம் திகதியும், மைத்திரிபால சிறிசேன பயன்படுத்திய லெக்ஸஸ் டிஃபென்டர் 24 ஆம் திகதியும், கோட்டாபய ராஜபக்ச பயன்படுத்திய லேண்ட் ரோவர் ஜீப் 23 ஆம் திகதியும், ரணில் விக்ரமசிங்க பயன்படுத்திய லேண்ட் க்ரஷர் பிராடோ 28 ஆம் திகதியும் ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக ஜனாதிபதி செயலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தின் மூத்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், முன்னாள் ஜனாதிபதிகள் வைத்திருக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் இரண்டாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் முன்னர் ஒரு அமைச்சரவை அமைச்சர் பயன்படுத்தக்கூடிய அரசு வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாகக் கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது.

Share This