ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பில்  500 பேர் காயம்

ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 500 பேர் காயம்

தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள துறைமுகமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்டிடங்களும் சேதமடைந்துள்ள நிலையில் மக்கள் இடிபாடுகளுக்கு சிக்கியுள்ளனர். எவ்வாறாயினும் உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மூடப்படாத பல கொள்கலன்கள் வெடித்ததாக அந்நாட்டு அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

CATEGORIES
TAGS
Share This