மிதிகம பகுதியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு

மிதிகம பகுதியில் அதிகாலையில் துப்பாக்கிச் சூடு

மிதிகம, பத்தேகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (17) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டின் விளைவாக வீட்டின் முன் ஜன்னல் மற்றும் சுவரில் பல தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், துப்பாக்கிச் சூட்டுக்கான காரணமோ அல்லது சந்தேக நபர்கள் தொடர்பான தகவலோ இன்னும் வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This