சாலி நளீமின் இராஜினாமா தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பு

சாலி நளீமின் இராஜினாமா தொடர்பில் சபாநாயகர் அறிவிப்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சாலி நளீம் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சபாநாயகர் இன்று (15) நாடாளுமன்றத்தில் சபைக்கு அறிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகரசபைக்கு போட்டியிடுவதற்காகவே தான் பதவி விலகுவதாக நேற்று (14) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

சாலி நளீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியலிலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share This