அரிசி மாபியாவை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் தயார்: ஜனாதிபதி

அரிசி மாபியாவை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் தயார்: ஜனாதிபதி

அரிசி நெருக்கடியை தீர்ப்பதற்காக கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனத்திற்கு இம்மாதம் 20ஆம் திகதிக்குள் 50,000 மெற்றிக்தொன் அரிசி வழங்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரிசி கையிருப்பு தொடர்பான அறிக்கைகள் தொடர்பில் சிக்கல் நிலை காணப்படுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடரும் அரிசி மாபியாவை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் தயாராகி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க,

“நாங்கள் ஆட்சிக்கு வந்து சிறிது காலம் தான். ஆனாலும், விவசாயத் திணைக்களத்திடம் இருந்து நுகர்வோர்கள் அரிசி தட்டுப்பாடால் தவிப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், நுகர்வோர் ஆணையம் நடத்திய கணக்கெடுப்பின்படி அரிசிக்கு தட்டுப்பாடு இருப்பதாக தெரியவந்துள்ளது. எனவே, இதை இரண்டு அல்லது மூன்று பேர் கொண்ட ஏகபோக உரிமையாளருக்குச் சொந்தமாக்கக் கூடாது என்று நாங்கள் முடிவு செய்தோம். இப்போது அந்த பலம் அவர்களிடம் உள்ளது. ஏனென்றால் நம்மிடம் கட்டுப்படுத்த எந்த கருவியும் இல்லை. நாங்கள் கடினமான நிலையில் இருக்கிறோம். தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். ஆனால், அதற்கு சிறிது காலம் எடுக்கும்” என்றார்.

CATEGORIES
Share This