அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்

அனுராதபுரத்தில் பெண் வைத்தியர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் வைத்தியர் விடுதியில் பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (11) நாடாளுமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர், சந்தேக நபரைக் கண்டுபிடித்து கைது செய்ய ஐந்து பொலிஸ் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

திங்கள்கிழமை (10) இரவு நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனையடுத்து வைத்தியசாலையின் வைத்தியர்கள் விரைவான நீதி கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் கவலைகளை எழுப்பியதுடன், பொது வைத்தியசாலைகளில் பெண் வைத்தியர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியும் பேசினார்.

அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோன்ற குற்றங்களைச் செய்பவர்களைத் தண்டிக்க கடுமையான சட்டங்களை முன்மொழிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்டவருக்கு விரைவான நீதியை உறுதி செய்ய அதிகாரிகள் அதிகரித்து வரும் அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர், அதே நேரத்தில் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Share This