தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தல்

வேட்புமனுக்கள் கோரப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நேற்று (03) முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
எச்சந்தர்ப்பத்திலும் இந்த திகதி நீட்டிக்கப்படாது என அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தபால் மூல விண்ணப்பப் படிவங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான (www.elections.gov.lk) க்கு பிரவேசித்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.