மீனவர் பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழகத்துடன் பேச்சுகள் தொடரும் – அமைச்சர் சந்திரசேகர் தெரிவிப்பு

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் அமைச்சரின் தலைமையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற போதே இவ்வாறு கூறினார்.
அதற்கமைய, மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தமிழகத்துடனும் இந்திய உயர்ஸ்தானிகருடனும் அவசியமான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.
இலங்கை மீனவர்களைப் எதிர்கொண்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.