பொசன் பண்டிகையை முன்னிட்டு 3,500 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்

பொசன்பண்டிகையை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை (9) முதல் அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அதனை அண்மித்துள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்தை நிர்வகிக்கவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், இந்த வழிபாட்டுத் தலங்களை அடிப்படையாகக் கொண்ட குளங்களை அண்மித்து ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் பாதுகாப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் ,பொலித்தீன் போன்றவற்றை கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும், தங்களின் உடைமைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறும் பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.