கிண்ணியாவில் போதைப்பொளுடன் பெண்ணொருவர் கைது

கிண்ணியாவில் போதைப்பொளுடன் பெண்ணொருவர் கைது

கிண்ணியாவில் விற்பனைகாக 12,420 மில்லிகிராம் ஐஸ் போதை பொருளை தனது உடமையில் மறைத்து வைத்திருந்த பெண் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிண்ணியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய குறித்த பெண் கைதுசெய்யப்பட்டதாக  தெரிவிக்கப்படுகிறது.

கிண்ணியா – மகரூப் நகர் பிரதேசத்தை சேர்ந்த, ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This