ஐ.டி.என் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் இணைக்கப்படுமா – அமைச்சர் பதில்

ஐ.டி.என் மற்றும் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தையும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தையும் இணைப்பது குறித்து எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிறுவனங்கள் தனித்தனியாக நவீனமயமாக்கப்பட்டு இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக மாற்றப்படும் என்று அவர் கூறினார்.