பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கங்கள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, வடமத்திய, ஊவா, வடமேல் மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு இன்று (17) பிற்பகல் 12:30 முதல் இரவு 11:00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இடியுடன் கூடிய மழை, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன்
செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

Share This