
வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை
நிலவும் வெப்பமான வானிலை குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெப்பக் குறியீடு நாளை ஞாயிற்றுக்கிழமை (08) எச்சரிக்கை அளவை எட்டக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
வடமேல் மாகாணம் மற்றும் வடமத்திய மாகாணத்தின் சில பகுதிகளில் வெப்பக் குறியீடு மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை
எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு, கம்பஹா, வவுனியா, மன்னார், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, அதிகரித்து வரும் வெப்ப அளவுகள் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கவும், இந்தக் காலகட்டத்தில் வெப்பம்
தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
CATEGORIES இலங்கை
