
விஜயின் தேர்தல் பிரசாரம் நாளை திருநெல்வேலியில்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருநெல்வேலியில் நாளை தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து கே.டி.சி நகர் பகுதியில் அவர் பிரசாரம் செய்யவுள்ளார்.
பாதுகாப்பு கருதி, 5,000 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வாகனத்தில் இருந்தபடியே மக்களைச் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடுகளை அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES இந்தியா
