எட்டியாந்தோட்டையில் வாகன விபத்து – வயோதிபப் பெண் பலி

எட்டியாந்தோட்டையில்  வாகன விபத்து –  வயோதிபப் பெண் பலி

எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுள்ளவல விகாரை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

ஹட்டன் – கொழும்பு வீதியின் பதுள்ளவல விகாரை பகுதியில் விபத்து சம்பவித்துள்ளது.

கரவனெல்ல நோக்கி பயணித்த தனியார் பஸ், முன்னால் பயணித்த வாகனத்தை முந்திச்செல்ல முற்பட்ட போது எதிர்த்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

நாவலப்பிட்டி – பவ்வாகம பகுதியைச் சேர்ந்த 84 வயதானவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் எட்டியாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This