கடந்த 24 மணிநேரத்தில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 84 பேர் பலி

கடந்த 24 மணிநேரத்தில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 84 பேர் பலி

கடந்த 24 மணிநேரத்தில் காசா மீதான இஸ்ரேலியத் தாக்குதலில் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

காசா முழுவதும் இஸ்ரேல் தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 ஒக்டோபரில் தாக்குதல் மேற்கொண்டர். இதன்போது சுமார் 1,200 பேர் உயிரிழந்ததுடன் 200 இற்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

அந்த தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 02 வருடங்களாக காசா உள்ளிட்ட பலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.

காசாவில் உயிரிழந்தவர்களில் பெரும்பான்யானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா தரவுகள் தெரிவிக்கின்றன.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,000 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

மேலும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கினறன.

Share This